நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜி இளைஞர் மன்றம்

தேவர் தென்னாட்டு போஸ்

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

ஒருமுறை நேதாஜி சென்னை வந்தபோது மாடிப்படி ஏறுகையில், வரவேற்க இரண்டு, இரண்டு படிகளாக தாவிச் சென்றார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . இவரிடம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார் நேதாஜி. தமிழக பார்வர்ட் பிளாக்கின் கிளையை துவங்கி வைத்து, அதன் தலைவராக தேவரை அறிவித்தது மட்டுமல்லாமல், "தேவர் தென்னாட்டு போஸ்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் போஸ்.

சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஆன்மீக வழியில் நடந்த போஸ், "வேதாந்தமும், பகவத் கீதையுமே பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களை வழி நடத்தும் கருவிகள் " என்று அறிவித்தார்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல" என்று முழங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்க பட, ஆனால் 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment

என்னைப்பற்றி