
சமீபத்தில் 111 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கட்டாக் நகரில் திரு ஜானகிநாத் - திருமதி பிரபாவதி தேவி தம்பதிக்கு 9 வது மகனாக (மொத்த 14 குழந்தைகள்) சுபாஷ் பிறந்தார்..
தந்தை வழக்கறிஞர்.. ஆதலால் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைத்தது.. புத்திசாலி மாணவரான சுபாஷ், 1919 ஆம் ஆண்டு பள்ளியின் முதல் மாணவராக வெளிவந்தது.. பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜில் BA (Philosophy) முடித்தது.. பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைபட்டிருப்பது எண்ணி மனம் வெதும்பியது.. பின்னர் இங்கிலாந்து சென்று சிவில் சர்வீஸ் முடித்தது அனைத்தும் வரலாறு..
தேசப்பிதா காந்தியடிகள் நிறுத்தியவர்களை எதிர்த்து இரு முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. பின்னர், காந்தியடிகளுடனான மன வருத்தம் அதிகமாகவே, காங்கிரஸிலிருந்து வெளியேறி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் துவக்கினார்..
அகிம்சையினால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைப்பது கடினம் என ஆணித்தரமாக நம்பினார்.. ஆயுத ஏந்தி பரங்கியரை எதிர்த்து போர் புரிந்தார்..
1947ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் ஜப்பானுக்கு வினானமார்க்கமாக செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டது..
அவர் மரணமடைந்த செய்தியை ஜப்பானிய அரசு 5 நாள்களித்தே வெளியிட்டது..
இன்றும் அவரது மரணம் புதிராகவே உள்ளது..
வாழ்க இந்தியா !! வாழ்க நம் சுதந்திரம் !!
No comments:
Post a Comment